அரசியலமைப்பின் பிரிவு 14 யு மூலம் தகவல் அணுகும் உரிமை நிறுவப்பட்டுள்ளதனாலும், தகவல் அறியும் உரிமையை அமுல்படுத்துவதன் மூலம் பொது அதிகாரங்களில் வெளிப்படைத் தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் கலாச்சாரத்தை வளர்க்க வேண்டிய அவசியம் இருப்பதனாலும், இலங்கை மக்கள் நல்லாட்சியில் அதிகம் பங்குபற்றக்கூடிய மற்றும் நாட்டின் பொது வாழ்வில் தீவிரமாக பங்குபற்றக்கூடிய ஒரு சமூகத்தை மேம்படுத்துவதற்காகவும், 2016ஆம் ஆண்டின் தகவல் அறியும் உரிமைச் சட்டம் எண் 12 இயற்றப்பட்டதுடன் அதன் துணைப்பிரிவு 5ன் மூலம் தடைசெய்யப்பட்ட தகவல்களைத் தவிர, எங்கள் வசம் உள்ள மற்றும் நம்மால் கட்டுப்படுத்தப்படும் தகவல்களை வழங்க சட்டம் எங்களுக்கு அதிகாரம் அளிக்கிறது.